காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

"கிசுகிசு'வில் சிக்காத நடிகை

1973-இல் வெளியான நடிகர் திலகத்தின் 163வது படமான "பொன்னூஞ்சல்' (கறுப்புவெள்ளை) வாயிலாக சிவாஜிகணேசனின் ஜோடியாக

News image
Updated On :3 மே 2015, 2:09 pm IST

1973-இல் வெளியான நடிகர் திலகத்தின் 163வது படமான "பொன்னூஞ்சல்' (கறுப்புவெள்ளை) வாயிலாக சிவாஜிகணேசனின் ஜோடியாக பெருமையாக அறிமுகமானவர் நடிகை "உஷாநந்தினி' இவர் தொடர்ந்து சிவாஜி, ஜெய்சங்கர் என இரு ஹீரோக்களுடன் மட்டுமே குறிப்பிட்ட படங்களில் ஜோடியாய் நடித்து வந்தார். குறிப்பிட்ட காலகட்டத்தில் கௌரவம் (1973), ராஜபார்ட் ரங்கதுரை (1973), மனிதனும் தெய்வமாகலாம் (1975), என்னை போல் ஒருவன் (1978) என சிவாஜி கணேசனோடும், பொன்வண்டு, தாய்வீட்டு சீதனம், அத்தையா மாமியா, என ஜெய்சங்கருடனும் ஜோடியாக நடித்தார் உஷாநந்தினி. இவர் தமிழில் சிவாஜிக்கு ஜோடியாக அறிமுகம் ஆகும் முன்னரே 1972-இல் வெளியான டி.ஆர்.ராமண்ணாவின் சக்திலீலை படத்தில் பரமசிவன் வேடம் பூண்ட ஜெமினி கணேசனுக்கு ஜோடியாய் பார்வதிதேவி வேடம் ஏற்று சிறப்பித்தவராகும்.
 தமிழில் வெளியான ஆயிரம் ஜென்மங்கள் (1978) படத்தின் மூலப் படமான யக்ஷகானம் (இயக்குநர்: ஷீலா) மலையாள படத்தில், பத்மப்ரியா தமிழில் ஏற்ற வேடத்தை சிறப்பாக செப்பனிட்டு கேரள மக்களின் அபிமானத்தை ஈட்டியவர். "கிசுகிசு'வில் தன்னை இணைத்துக் கொள்ளாத உஷாநந்தினி திருமதியான பின்பு திரையுலகைத் திரும்பி பார்க்காத நட்சத்திரமாவார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.